இலங்கையின் மத்திய பிரதேசமாகக் கருதப்படும் மாத்தளை மாவட்டமானது 19939 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டமைந்ததுடன், கிழக்கு அகலாங்கு 80.28 இல் இருந்து 80.59 வரையும் வடக்கு நெட்டாங்கு 7.24 இல் இருந்து 08.01” வரையும் பரந்திருக்கின்றன.
மாத்தளை மாவட்டத்தின் எல்லைகளாக வடக்கில் அநுராதபுரத்தையும் கிழக்கில் பொலன்னறுவை, பதுளை மற்றும் அம்பாறையையும் தெற்கில் கண்டியையும் மேற்கில் குருநாகலையையும் கொண்டமைந்துள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 1000 அடியிற்கும் குறைவான நிலப் பரப்பினையும் 2000 அடியிற்கு மேற்பட்ட நிலப் பரப்பினையும் கொண்டமைந்துள்ள பூகோளவியலின் அடிப்படையில் நக்கல்ஸ், ஓவிலிகந்த, எத்திபொல, மகுலுஸ்ஸ, தெட்டிகல, தம்புலுகல மற்றும் அரங்கல ஆகிய மலைத் தொடர்களினால் வியாபித்துக் காணப்படுகின்றமை மற்றும் அவ் மலைத்தொடர்களில் இருந்து பாய்ந்தோடும் அருவிகள், ஆறுகள் மற்றும் நீரோடைகளின் கண்கவர் காட்சி, அழகிய சூழல் மற்றும் 230C தொடக்கம் 310C வரையிலான மிதமான வெப்பநிலையுடன் கூடிய காலநிலை ஆகியனவற்றைக் கொடையாகப் பெற்ற மாத்தளை நகரத்தினை பார்வையிடுவதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பிரயாணிகள் வருகைத் தரும் ஓர் இடமாக திகழ்கின்றது. அதேப்போல் உப்புத் தவிர்ந்த பல்வேறுப்பட்ட கனிய வளங்கள், மனிதனின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான சகல வளங்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக பங்களிப்பினை நல்கும் மாவட்டமாக மாத்தளை மாவட்டத்தினைக் குறிப்பிடலாம்.