நிதி மற்றும் கொள்கைகள் குழு கூட்டத்தினை நடாத்துதல் | திகதி | 24 | 21 | 21 | 25 | 23 | 20 | 25 | 22 | 19 | 24 | 21 | 19 |
நாள் | வெள்ளிக்கிழமை | புதவெள்ளிக்கிழமைன் | வெள்ளிக்கிழமை | வெள்ளிக்கிழமை | வெள்ளிக்கிழமை | வெள்ளிக்கிழமை | வெள்ளிக்கிழமை | வெள்ளிக்கிழமை | வெள்ளிக்கிழமை | வெள்ளிக்கிழமை | வெள்ளிக்கிழமை | வெள்ளிக்கிழமை | |
நேரம் | மு.ப. 02.00 | மு.ப. 02.00 | மு.ப. 02.00 | மு.ப. 02.00 | மு.ப. 02.00 | மு.ப. 02.00 | மு.ப. 02.00 | மு.ப. 02.00 | மு.ப. 02.00 | மு.ப. 02.00 | மு.ப. 02.00 | மு.ப. 02.00 |
1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 168 ஆம் பிரிவின் கீழ் சனவரி 1 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரையில் உள்ளூராட்சி நிறுவனத்தின் வருடாந்த வரவு செலவு திட்டத்தினை தயாரிப்பதற்கான ஒழுங்கு விதியானது உள்ளடங்கியுள்ளது
தொ.இல | கருமங்கள் | இலக்கை அடைவதற்கான இறுதி திகதி | பொறுப்பு கூறுபவர் |
01 | வரவு செலவு திட்ட ஆவணத்தை தயாரிப்பதற்கான அறிவுறுத்தல்களை வழங்குதல் | ஏப்ரல் 01 ஆந் திகதி | நகராட்சி ஆணையாளர்/ செயலாளர் |
02 | பிரிவு குழுக்கள் மற்றும் உறுப்பினர்களின் முன்மொழிவுகளை சமர்ப்பித்தல் | ஜூன் 30 ஆம் திகதி | பிரிவு குழுக்கள் மற்றும் உறுப்பினர்கள் |
03 | வருமானங்கள் மற்றும் செலவீனங்கள் தொடர்பாக அவ் அவ் பிரிவுகளின் அறிக்கைகளை சமர்ப்பித்தல் | ஜூன் 30 ஆம் திகதி | பிரிவுத் தலைவர்கள் |
04 | அடிப்படை மதிப்பீடுகளை தயாரித்தல் | ஜூலை 01 ஆந் திகதி | கணக்காளர்/ நூல்கள் பராமரிப்பு உத்தியோகத்தர்/ வரவு செலவுத்திட்ட ஆவண உத்தியோகத்தர் |
05 | நிதி குழுவின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளல் | ஜூலை 31 ஆந் திகதி | நகராட்சி ஆணையாளர்/ செயலாளர் |
06 | மதிப்பிற்குரிய நகர பிதா/ மதிப்பிற்குரிய தலைவரின் மீளாய்வு கூட்டம் | ஆகஸ்ட் 01 ஆந் திகதி | மதிப்பிற்குரிய நகர பிதா/ மதிப்பிற்குரிய தலைவர் |
07 | வரவு செலவு திட்ட கொள்கைகளை தீர்மானித்தல் மற்றும் சபைக்கு சமர்ப்பித்தல் | ஆகஸ்ட் 31 ஆந் திகதி | மதிப்பிற்குரிய நகர பிதா/ மதிப்பிற்குரிய தலைவர் |
08 | பிரிவுகளுக்குரிய வரவு செலவு திட்ட மதிப்பீடுகளை தயாரித்தல் | செப்டம்பர் 30 ஆம் திகதி | பிரிவுத் தலைவர்கள் |
09 | இறுதி வரவு செலவு திட்ட மதிப்பீட்டினை தயாரித்தல் | ஒக்டோபர் 31 ஆந் திகதி | கணக்காளர்/ நூல்கள் பராமரிப்பு உத்தியோகத்தர்/ வரவு செலவுத்திட்ட ஆவண உத்தியோகத்தர் |
10 | நிதி தொடர்பான நிலையான குழுவினால் வரவு செலவு திட்ட ஆவணத்திற்கான சட்ட வரைவுகளை பரிசீலனை செய்தல் | நவம்பர் 01 ஆந் திகதி | நகராட்சி ஆணையாளர்/ செயலாளர் |
11 | வரவு செலவுத் திட்ட செய்திகளை தயாரித்தல் | நவம்பர் 20 ஆம் திகதி | மதிப்பிற்குரிய நகர பிதா/ மதிப்பிற்குரிய தலைவர் |
12 | வரவு செலவுத் திட்டத்திற்குரிய சட்ட வரைப்புகளை தயாரித்தல் | நவம்பர் 30 ஆம் திகதி | மதிப்பிற்குரிய நகர பிதா/ மதிப்பிற்குரிய தலைவர் |
13 | வரவு செலவுத் திட்ட ஆவணத்தின் சட்ட வரைபினை அங்கீகரித்தல் | டிசம்பர் 01 ஆந் திகதி | சபை |
14 | அவசியமேற்படின் வரவு செலவுத் திட்ட ஆவண சட்ட வரைபினை இரண்டாவது தடவையும் சமர்ப்பித்தல் | டிசம்பர் 15 ஆம் திகதி | மதிப்பிற்குரிய நகர பிதா/ மதிப்பிற்குரிய தலைவர் |
15 | வரவு செலவு திட்ட ஆவணத்தினை அச்சிட்டு பகிர்ந்தளித்தல் | டிசம்பர் 31 ஆந் திகதி | நகராட்சி ஆணையாளர்/ செயலாளர் |
உள்ளூராட்சி நிறுவனங்களினால் வரவு செலவுத் திட்டத்தினை தயாரிக்கும் போது பிரதானமாக கீழ் குறிப்பிடப்பட்ட வேலைத்திட்டங்கள் இடம் பெறல் வேண்டும்.
மேல் குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு வேலைத்திட்டங்களின் பிரகாரம் செலவீனங்களானது பின்வரும் முக்கிய செலவீனத் தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தப்படுகின்றன.
உள்ளூராட்சி நிறுவமானது தன்னிச்சையாக இயங்கும் ஓர் நிறுவனம் ஆகும். கட்டளைச் சட்டங்கள் மற்றும் சட்டங்களினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் பிரதேச சபையின் நிதியினை எவ் விடயத்தின் கீழ் முதலீடு செய்வது தொடர்பாக தெளிவான விளக்கங்கள் குறிப்பிடப்பட்ட சட்டங்களில் வழங்கப்பட்டுள்ளன.
அதேப்போல் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கென தனித்துவமான கணக்கு முறைமை ஒன்று இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரதேச சபையின் கணக்கிற்கு கிடைக்கப் பெறும் நிதியானது சரியான முறையில் கணக்கில் பதியப்படுதல் மற்றும் அவ் நிதியானது குறித்துரைக்கப்பட்ட செலவீனங்களுக்காக மாத்திரம் செலவிடப்படுகின்றதா என்பதினை உறுதி செய்து கொள்வதற்கு இயலுமானதாக உள்ளன.
உள்ளூராட்சி நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்படும் கணக்கு முறையமையின் விசேட பண்பாவது, ஜனவரி மாதம் 01 ஆந் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 31 ஆந் திகதி வரையில் ஓர் வருடத்திற்கு கிடைக்கப் பெற்ற நிதியின் அடிப்படையில் பெறுதல் மற்றும் செலவீனங்கள் பதியப்படுவதுடன் வருட இறுதியில் (காலாண்டு இறுதியிலும் செய்ய முடியும்) கணக்கினை தயாரிக்கும் போது நிதி திரட்டலின் அடிப்படையில் குறிப்பிடப்பட்ட வரவுகள் வருமானமாகவும் பணம் மீளச் செலுத்துதல் செலவீனமாகவும் கணக்கெடுக்கப்படுகின்றன. வருட இறுதியில் மேலும் குறிப்பிடப்பட்ட ஆண்டிறுதி கணக்கில் யாதேனும் வருமானம் அறவிடப்பட வேண்டி இருப்பின், நிலுவையிலுள்ள வருமானமானது கடன்பட்டோர் என்ற அடிப்படையிலும் வருட இறுதியில் அதன் பெறுமதியானது கடன் கொடுப்போர் கீழ் செலவு வைக்கப்படும். வருடத்திற்குரிய வருமானம் மற்றும் செலவீனம் கணக்கிடப்பட்டு மேலதிகமாக அல்லது பற்றாக்குறையாக யாதேனும் இருந்தால் அதனை திரட்டப்பட்ட நிதிக்கு மாற்றுவதன் மூலம் கணக்குகள் தீர்க்கப்படும்.
இப் பணியினை பூர்த்தி செய்வதற்கு உள்ளூராட்சி நிறுவனங்களான மாநகர சபை, நகர சபை, சிறுநகர சபை மற்றும் கிராம சபை போன்றவற்றில் சீரான ஒரே விதமான கணக்கு முறைமை பயன்படுத்தப்படவில்லை. ஒவ்வொரு உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் ஒழுங்கு விதிகள் மற்றும் நிதி கட்டுப்பாட்டு முறைமை உள்ளடக்கப்பட்டு இருப்பினும் நிதி முகாமைத்துவம் தொடர்பாக தெளிவான ஒழுங்கு விதி கோவைகள் இருக்கவில்லை. இவ்வாறு நடைமுறையில் இருந்த பல்வேறு விதமான கணக்கு முறைக்கு பதிலாக ஒரே பண்பினை கொண்ட கணக்கு முறைமை ஆனது 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் திகதி இலக்கம் 96 இனை வகைக்கும் வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக வரவு செலவு வேலைதிட்ட கணக்கு முறைக்கு தொடர்புடையவாறு கணக்கியல் முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டதுடன் அது “விக்ரமநாயக கணக்கு முறை” என்று அழைக்கப்பட்டது. மேலும் இக் கணக்கு முறைமையானது இரட்டை பதிவு கணக்கு முறையினை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளதுடன் அதற்கு பொருத்தமான மாதிரிகள் மற்றும் ஆவணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவ் ஆவணங்கள் சுயமாகவே கணக்கினை சமநிலைப் படுத்தப்படும் கணக்கு ஆவணமாக பெயரிடப்பட்டுள்ளது.
இப் சுய சமநிலை கணக்காவணமானது (பற்றுச்சீட்டு) பில் செய்வதற்கும் மற்றும் பெறுதலினை உள்ளீடுச் செய்வதற்கும் செங்குத்தாக மற்றும் கிடைப்பக்கமாக சமநிலைப்படுத்தப்படும் ஆவணமாகும்.
மாநகர சபை மற்றும் நகர சபைகளில் விக்கிரமநாயக கணக்கு முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இறுதி கணக்கினை அடுத்த ஆண்டின் மார்ச் மாதம் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன் தீர்க்கப்பட்டு கணக்காய்வாளருக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருப்பினும் அது ஒழுங்கு விதியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.. பிரதேச சபைகள் தொடர்பாக 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆந் திகதி இலக்கம் 554/4 இன் ஊடாக IV (ஆ) பகுதியில் உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்புடைய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் முதலாவது ஒழுங்கு விதியின் பிரகாரம் 168(1) ஆம் ஒழுங்கு விதியின் கீழ் இறுதிக் கணக்கினை அடுத்த வருடம் மார்ச் 31 ஆந் திகதி அல்லது அதற்கு முன்பாக தீர்க்கப்பட்டு கணக்காய்வாளருக்கு அனுப்புதல் வேண்டும்.
நிதித் தொகையின் மீதியை உறுதிப்படுத்துவதற்கு சாட்சியாக வங்கியின் வங்கி கணக்கிணக்க கூற்றினைச் சமர்ப்பித்தல் வேண்டும். இறுதி கணக்கு கூற்றுகளின் பிரதிகளை உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு அனுப்புதல் வேண்டும்.
திட்டமிடல்
பொதுச் சபை மற்றும் நிதி குழுவானது 1988 ஆம் ஆண்டு பிரதேச சபைகளின் 178 ஆம் ஒழுங்கு விதிகள் பிரகாரம் விலைமனுக் கோரும் (டென்டர்) நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.
1988 ஆம் ஆண்டு பிரதேச சபைகளின் 178 ஆம் ஒழுங்கு விதிகள் மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 2006 திட்டமிடல் வழிகாட்டல் கோவை மற்றும் 2006 ஆம் ஆண்டின் திட்டமிடல் பணி கோவை ஆகியவற்றின் விதிமுறைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படுகின்றன.
பிரதேச சபையின் யாதேனும் வருடத்திற்காக தயாரிக்கப்பட்ட வரவு செலவு திட்ட ஆவணத்தில் எதிர்பார்க்கப்பட்ட நிதியானது எல்லை வரம்பினை மீறும் போது அல்லது நிதி ஒதுக்கப்படாத வருமான தலைப்பிற்கு அல்லது செலவீன தலைப்புக்காக குறை ஒதுக்கீட்டு வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டினை தயாரித்தல் வேண்டும். அவ் குறை ஒதுக்கீட்டு வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டினை தயாரித்ததன் பின், பொது சபைக்கு இது தொடர்பாக முன்மொழிவினை சமர்ப்பித்து அனுமதியினைப் பெறல் வேண்டும். அதன்பின் அதனை வருடாந்த வரவு செலவு திட்டத்திற்கு உள்ளடக்குதல் வேண்டும்
நிறுவனத்தின் நிதி கணக்கின் மீதியினை மீள்திருத்தம் செய்ததன் பின் வங்கிக் கணக்கிணக்க கூற்று தயாரிக்கப்படும். அதன் பிறகு வங்கியினால் அனுப்பப்படும் கூற்றின் மிகுதி அக்கால பகுதியில் வங்கிக்கு சமர்ப்பிக்கப்படாத காசோலைகளுக்கான பெறுமதிகளினால் குறைக்கப்படல் வேண்டும்.
வங்கியினால் கொடுக்கல் வாங்கல் அறிக்கையினை அனுப்பும் போது அதில் இருக்கும் பிழைகள் மற்றும் குறைபாடுகளை சரியான முறையில் சரிப்படுத்தல் மற்றும் நிவர்த்திச் செய்தல் வேண்டும்.
மேலும் காசு கையிருப்பு தொகை எனில் அதனை வங்கி கூற்றின் மிகுதிக்கு சேர்த்தல் வேண்டும்.
இவ்வாறு சரி பிழை பார்த்து பிறகு தயாரிக்கப்படும் வங்கி கணக்கிணக்க கூற்றானது ஒவ்வொரு மாதமும் பத்தாம் திகதிக்கு முன்னர் கணக்காய்வு செய்வதற்காக கணக்காய்வாளர் மற்றும் உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு அனுப்புதல் வேண்டும். மேலதிகமாக நிறுவனத்தினால் வழங்கப்படும் காசோலைகளானது ஆறு மாதங்கள் வரையில் வங்கியில் சமர்ப்பிக்கப்படாவிடின் நிதி பிரமாண குறிப்பின் 394 ஆம் பிரிவின் பிரகாரம் வருமானத்தில் சேர்க்கப்படல் வேண்டும்
(இவ் வருடத்திற்கு உரிய வர்த்தமானி பத்திரிக்கை PDF வடிவில் வழங்கப்படும்.)
வர்த்தமானி பத்திரிக்கையின் திகதி மற்றும் இலக்கம் -2363 – 2023/12/15
வழங்குனர்களைப் பதிவுச் செய்தல்
வரி மற்றும் கட்டணத்தினைப் பதிவுச் செய்தல்
நடைமுறைகளை தயாரித்தல்
சம்பளத்தினை தயாரிப்பதற்காக உசாத்துணையாகக் கொள்ளப்படும்
சுற்றறிக்கைகள்
ඉහත එක් එක් වැඩසටහන් අනුව පහත සදහන් ප්රධාන වැය ශිර්ෂ යටතේ වියදම් වර්ග කර දක්වයි.
ආයතනයේ මුදල් ගිණුමේ ශේෂය සංශෝධනය කිරිමෙන් පසු බැංකු සැසදුම් ප්රකාශනය පිළියෙල කරනු ලබයි.ඉන්පසු බැංකුවෙන් එවන ලද ප්රකාශනයේ ශේෂයට,
මේ ආකාරයට ගැලපිම් කිරිමෙන් පසු සාදන බැංකු සැසදුම් ප්රකාශනය සෑම මසකම 10 වන දිනට පෙර විගණනය කිරිම සදහා විගණන අධිකාරි වෙත හා පළාත් පාලන සහකාර කොමසාරිස්තුමා වෙත යැවිය යුතුය.මිට අමතරව ආයතනය විසින් නිකුත් කළ චෙක්පත් මාස 06ක් යනතුරැත් බැංකුව වෙත ඉදිරිපත් කර නොමැති නම් මුදල් රෙගුලාසි 394 අනුව සහ ආදායමට ගත යුතුයි.
ප්රාදේශිය සභාවක් යම් කිසි වර්ෂයක් වෙනුවෙන් සකස් කරන අයවැය ලේඛණයක අපේක්ෂිත ප්රතිපාදන සිමාවක් ඉක්මවමින් හෝ ප්රතිපාදනයක් වෙන් නොකළ අයශිර්ෂයකි හෝ වැය ශිර්ෂයක් වෙනුවෙන් පරිපුරක අයවැය ඇස්තමේන්තුවක් පිළියෙල කළ යුතු වේ.ඤඑම පරිපුරක අයවැය ඇස්තමේන්තුව සකස් කිරිමෙන් පසු මහසභාව වෙත යෝජනාවක් ඉදිරිපත් සම්මත කර ගත යුතුය.ඉන්පසු එය වාර්සික අයවැයට ඇතුළත් කළ යුතු වේ.